காரைதீவு தவிசாளர் யார்? காரைதீவு எடுத்த முடிவை கட்சி செயற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் ! செல்வப்பிரகாஷ்!!
( வி.ரி. சகாதேவராஜா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக யார் பிரபல சமூக நியமிக்கப்பட வேண்டும் என்பதை காரைதீவு மண் முடிவெடுத்துள்ளது.
காரைதீவு மண் எடுத்த முடிவை எமது கட்சி செயற்படுத்தும் என முழுமனதுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளைச் செயலாளர் கதிராமத்தம்பி செல்வப்பிரகாஷ் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைக்குழு உறுப்பினர்கள், துணை வேட்பாளர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்து கலந்துரையாடல் கூட்டங்களை நடாத்தினோம்.
மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் இடம் கருத்து ஆலோசனை கேட்டோம். 90வீதமானவர்கள் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை தவிசாளராக தெரிவு செய்ய அமோக ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
காரைதீவு வேட்பாளர்கள் நால்வரும் அந்தந்த வட்டாரங்களில் பெற்ற வாக்குகள் இறங்கு வரிசைப்படி முறையே கி.ஜெயசிறில்- 1101(80%) வை.கோபிகாந்- 980(69.04%) சி.சிவகுமார்- 812(48.02%) சு.பாஸ்கரன்- 786( 70.05%)
ஆகும்.
அதன்படி, காரைதீவு பிரதேசத்தில் ஆகக்கூடிய 1101 வாக்குகளை பெற்ற தமிழினப் பற்றாளர் நல்ல அனுபவசாலி சமூக செயற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை நியமிக்க பலரும் தங்களது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார்கள்.
இதனை கட்சியின் பொதுச் செயலாளர் எம் ஏ. சுமந்திரன், அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் ( பொத்துவில் தொகுதி தலைவர்),
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ( சம்மாந்துறை தொகுதி தலைவர் ),
கட்சித் தலைவர் சிவிகே.சூவஞானம் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
No comments