Column Left

Vettri

Breaking News

கல்முனையில் கால நிலை மாற்றம் பிளாஸ்டிக் பாவனையாளர்களின் அதிகரிப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கு




செ.துஜியந்தன் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை சூழல் நேயன் அமைப்பினரும் இணைந்து பிரதேசத்தில் சுற்றாடல் விழிப்புணர்வு செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காலநிலை மாற்றமும், பிளாஸ்டிக் பாவனையாளர்களின் அதிகரிப்பும் என்ற தொனிப்பொருளில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரிட்டிஷ் கவுன்ஸ்சிலின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் டிசாலி கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார். இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவிகளும் கலந்து கொண்டதுடன் அனைவருக்கும் சூழல் நேயன் அமைப்பினரால் பயனுள்ள பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

No comments