மோகன் - கணேஸ் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் ஆரம்ப தொடர்!!!!
38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தும் "மோகன் - கணேஷ் ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)" உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் (08) அன்று சிறப்பாக இடம்பெற்றது
இப்போட்டியில் காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு அணிகளும் வளத்தாப்பிட்டி , சொறிக்கல்முனை, மண்டூர் ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒவ்வொரு அணிகளும் களம் இறங்கி இருந்தன. தொடர்ந்து இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் (19)அன்று சிறப்பாக இடம்பெறுவதுடன் வருடா வருடம் நடைபெறும் இப்போட்டிக்கு புலம்பெயர் வாழ் தோழர்கள் அனுசரணை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments