Column Left

Vettri

Breaking News

கல்முனையில் மாபெரும் மூன்று நாள் கல்விக் கண்காட்சி! கார்மேல் பற்றிமா கல்லூரி ஏற்பாடு




( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம் மூன்று நாட்கள் கண் காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை (04) கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நேற்று 5ஆம் மற்றும் இன்று 06ஆம் திகதிகளில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மாபெரும் கல்விக் கண்காட்சியில் மாணவர்களின் ஆக்கங்களை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்களும் வருகை தந்திருந்தனர்.

No comments