செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 79 ஆவது ஆண்டு விழா
(துஜி)
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று வித்தியாலய அதிபர் த.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டார்.
பாடசாலை வளாகத்தில் பத்து அடி உயரமான திருவள்ளுவர் சிலை நாட்டப்பட்டதுடன். 79 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தாகசாந்தி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments