Column Left

Vettri

Breaking News

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி!!




( வி.ரி. சகாதேவராஜா)

கதிர்காமத்தில்  சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள  இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம்  கையளிக்கப்படுமா? என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்  கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்திலும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

குறித்த கதிர்காமம் இ.கி.மடம் 1953 இல் பிரதமர் டட்லி சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது.

 1943 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல அமைப்புகள் கதிர்காமத்தில் உள்ள புனித ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்களுக்கு சேவை செய்யத் தொடங்கியது. அதன் ஓரங்கமாக உலகளாவிய ரீதியில் வியாபித்து ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் கதிர்காமத்தில் காலூன்றியது.

அதன் காரணமாக விசாலமான கட்டிடங்கள் கட்டப்பட்டு ராமகிருஷ்ண மிஷன் மடம் 1953 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த மாண்புமிகு டட்லி சேனாநாயக்க அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. 

 அப்போதிருந்து, மத வேறுபாடின்றி யாத்ரீகர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் வருடாந்த திருவிழாவின் போது, ​​17 நாட்களுக்கு தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட (10,000) யாத்ரீகர்களுக்கு இலவச உணவை மிஷன் வழங்கியது. மத விரிவுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் பஜனைகள் மடத்தில் வழக்கமான நடவடிக்கைகள் 1976 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் வரை மிஷன் ஒரு குடியுரிமை சுவாமியின் மேற்பார்வையின் கீழ் அதன் உன்னத சேவைகளைத் தொடர்ந்தது. 

அத்தகைய உன்னத ஜீவ சேவையாற்றிய இகிமிசன் மடத்தை மீண்டும் ஒப்படைத்து சமாதான பூமி புனித பூமி என்ற வாசகத்திற்கு அர்த்தம் சேர்க்குமாறு உலக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவும் குறிப்பாக பிரதமர் மோடியும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்கிறார்.

No comments