2026 ஆண்டு ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் சாத்தியமாகுமா?
மாகாண சபை தொடர்பாக, தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுடன், எல்லை நிர்ணயம் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும் தீர்வு காணப்படாதமையினால் மாகாண சபை தேர்தல் இவ்வாண்டு நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மேலும் தெரிவித்த பிரதியமைச்சர், மாகாணசபையுடனான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மாகாண நிர்வாகத்தை நிர்வகிக்கும் வகையில் சட்ட கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தலை நடத்தப்போவதில்லை. எல்லை நிர்ணய அறிக்கையைக்கொண்டு வந்தவர்கள் அதை தாக்கல் செய்தனர். பின்னர் அவர்களே அதற்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் அதை ஒரு முழுமையான நகைச்சுவையாக மாற்றியமைத்துள்ளனர்.முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தபோது பதற்றநிலை ஏற்பட்டது.
மகாணசபை எல்லை நிர்ணய முறையில் நிலவும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளைக் இது குறிக்கிறது.
வெளிக்கொணரப்பட்டுள்ள இந்த சிக்கலான பிரச்சினைகள் தொடர்பாக, அரசாங்கம் இப்போது முந்தைய தேர்தல் முறைக்கு மாற்றுவது மற்றும் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் குறித்து பரிசீலித்து வருகிறது.கிராம மக்களுக்கான உள்ளூராட்சி அமைப்பு அதாவது, கிராம உத்தியோகஸ்தர்கள், பிராந்திய செயலாளர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் திறம்பட செயற்படும் வகையில் அடிமட்ட பொது சேவைகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும். மக்களுக்கு சிறந்த அணுகல் மற்றும் அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில், உள்ளூர் அதிகாரிகளை மேலும் அதிகாரப்படுத்துவதுடன் இவர்களை உள்ளடக்கிய ‘இந்த பொறிமுறையை முறையாக அமைத்த பின்னரே மாகாண சபைகள் மீது நாம் கவனம் செலுத்துவோம்.
2026 ஆண்டு ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்த கேள்வியை அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்க எதிர்பார்த்துள்ளது. அதற்குள் சட்ட, நிர்வாக மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான குறைபாடுகள் தீர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடியதாகயிருக்கும். அதன்படி, அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு தற்போதைய சட்டத்திலுள்ள சிக்கல்கள் அனைத்தையும் சரி செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இது குறித்தான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments