Column Left

Vettri

Breaking News

காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள்! கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்மாதிரி!!





( வி.ரி.சகாதேவராஜா)
உலக சுற்றாடல் தினத்தில் காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு 
கல்முனை ஆதார வைத்தியசாலை வழங்கி முன்மாதிரியாக திகழ்கிறது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  கல்முனை  ஆதார வைத்தியசாலையும் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை நேற்று முன்தினம் முன்னெடுத்தன.

 நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கும் இடம் பெற்றது. 

இதன் போது கல்முனை  ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான 100 மரக்கன்றுகள் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்  திருமதி. ராகுல நாயகி சஜீந்திரனிடம் கையளிக்கப்பட்டது.
 மேலும் இந்நிகழ்வின்போது மரநடுகை செயற்பாடுகளும் இடம்பெற்றன.  இந்நிகழ்வின் போது கல்முனை  ஆதார வைத்தியசாலை  பிரதிநிதிகளுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.










No comments