கல்முனை ஆதார வைத்தியசாலையின் சைக்கிள் சவாரி
செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் சவாரி இன்று நடைபெற்றது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இவ் சைக்கிள் சவாரியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலை முன் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தனர்.
தற்காலத்தில் அதிகரித்துள்ள நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், இருத நோய், சீறுநீரக கோளாறு போன்ற பல்வேறு தொற்றா நோய்களின் தாக்கத்தினால் பலரும் நோம்தாக்கத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உடல் பயிற்சி மற்றும் உணவுப் பழக்க வழங்கங்களும் காரணமாக அமைந்துள்ளது.
இதனையிட்டு மக்களுக்கு தொற்றா நோய தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இவ் சைக்கிள் சவாரி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments