நீதிகோரி பொதுமக்கள் கவனயீர்ப்பு. வாள்வெட்டுக்குழுவை இல்லாதொழிக்குமாறு வேண்டுகோள்
வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து இன்று (26) கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
பாடசாலையின் முன்பாக ஆரம்பமான பேரணியானது ஆலையடிவேம்பு வீதியூடாக பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்களால் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் மகஜர் ஒன்றை கையளி;க்கப்பட்டது.
பாடசாலையின் முன்பாக ஆரம்பமான பேரணியானது ஆலையடிவேம்பு வீதியூடாக பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்களால் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் மகஜர் ஒன்றை கையளி;க்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுச்சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரியும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தும் இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்;டது.
பாதுகப்பற்ற நிலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் கற்பித்தல் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது எனவும் பொதுமக்கள்; இதன்போது கேள்வி எழுப்பினர்.
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இக்கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில்; கல்வி கற்கும் க.பொ.த.சாதாரண தர மாணவி ஒருவரை பயிற்சி செயலமர்விற்கு செல்லுமாறு அறிவித்தல் வழங்க அவரது வீட்டிற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் அவ்வீட்டில் இருந்து வெளிவந்த ஒருவரால் வாளால் தாக்கப்பட்டனர்.
இதனை கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது.
மகஜரை பெற்றுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக அச்சுறுத்தும் நிலை அதிகரித்து வருவதுடன் வீதிகளிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments