அக்கரைப்பற்று திருவள்ளுவர் ஆரம்ப பாடசாலையில் சுற்றாடல்சார் செயற்பாட்டுக்கண்காட்சி!!
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று திருவள்ளுவர் ஆரம்ப பாடசாலையில் இன்று (23) மாணவர்களின் சுற்றாடல்சார்; செயற்பாட்டுக்கண்காட்சி மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் சர்மிளா சசிகரன் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் பாடசாலையின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர் எம்.தங்கேஸ்வரன் ஆசிரிய ஆலோசகர் ரி.தர்;மரெத்தினம் ஆரம்ப பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.யோகராஜா பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் கே.சுதர்சன் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகளை வரவேற்ற மாணவர்கள் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பில் நாடகம் ஒன்றிணை நடித்துகாட்டி அனைவரது வரவேற்பையும் பெற்றுக்கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் சர்மிளா சசிகரன் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் பாடசாலையின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர் எம்.தங்கேஸ்வரன் ஆசிரிய ஆலோசகர் ரி.தர்;மரெத்தினம் ஆரம்ப பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.யோகராஜா பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் கே.சுதர்சன் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகளை வரவேற்ற மாணவர்கள் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பில் நாடகம் ஒன்றிணை நடித்துகாட்டி அனைவரது வரவேற்பையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னராக அதிதிகள் மாணவர்கள் இணைந்து சுற்றாடல்சார்; செயற்பாட்டுக்கண்காட்சியினை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து கண்காட்சியினையும் பார்வையிட்டனர். திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மிகச்சிறப்பான ஒழுங்குபடுத்தலுடனான கண்காட்சியாக அமைந்துள்ளமை கண்டு வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் இதுபோன்ற கண்காட்சிகள் மாணவர்கள் மத்தியில் புத்தாக்க திறமையினை ஊக்குவிக்கும் என்பதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் அதற்கு களமாக அமையும் என கூறினார்.
No comments