Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளின் நிருவாகத்தினர் கவனயீர்ப்பு பேரணி மற்றும் கவனையீர்ப்பு ஆர்ப்பாட்டம்






ஜே.கே.யதுர்ஷன்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருநாவுகரசு வித்தியால அதிபர் மற்றும் ஆசிரியர் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடத்த சனிக்கிழமை தம்பட்டை பகுதியில் இடம்பெற இருந்த கல்வி செயலமர்வு தொடர்பாக அறிவித்தல் வழங்க மாணவி ஒருவரின் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்தனர் 
அதன் போது அவ் மாணவியின் வீட்டில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் குறித்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்ளையும் அடித்து உடைத்துள்ளார் அதில் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.....

அதன் பின்னர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை பொதுமக்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிஸ்சார் கைது செய்தனர்.....

அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற இத்தாக்கு தலை கண்டித்து  அதிபர் ஆசிரியர் மாணவர்களின் கல்வி நடைவடிக்கைக்காக அர்பணிப்பு செய்து வரும் ஆசிரியர்கள் அதிபர்களின் பாதுகாப்பு கருதி  இன்றைய தினம் திருக்கோவில் கல்வி கேட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் கவனையீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர் குறித்த பேரணியானது தம்பிலுவில் மத்திய மகாவித்தியால பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தினை சென்றடைந்தது அதன்பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






அதற்கமைவாக திருக்கோவில் மெதடிஸ் மிஷன் தமிழ் மகாவித்தியால  பாடசாலை  அதிபர்  ,ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோர் இணைந்து இன்றையதினம் பாடசாலை முன்றலில்  கவனயீர்ப்பு ஒன்றினை முன்னெடுத்தனர்....

இதன் போது பாதுகாப்பற்ற நிலையில் ஆசிரியர்கள் அதிபர்கள் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வது எவ்வாறு என்ற கேள்வியும் அதன் எழுப்பட்டதுடன் அதிபர் ஆசியர்களின் பாதுப்பினை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கவனயீர்ப்பில்  கலந்து கொண்டவர் தெரிவித்தனர்.....

மேலும் குறித்த கவனயீர்ப்பி்ல் பிலேச்சதனமான தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்,ஆசிரியர்கள் கரங்களை வலுப்படுத்த ஒன்றினைவோம் புனிதமான ஆசிரியர் தொழிலை கலங்கப்படுத்தாதே போன்ற சுலோகங்கள் ஏந்திய பதாகைகள் ஏந்திய வாறு ஆசிரியர்கள் கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்......!!!

No comments