Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று!!




 அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று 27.05.2025 நடைபெற்றது.


 ஜே.கே.யதுர்ஷன்...

இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது. மீனவர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் களவெடுப்பதற்கு அமைய, விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பாக பேசி, இம்மீன் கொள்ளையை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எ. ஆதம்பாவாவினால் பிரேரணை  முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை ஆராயப்பட்டு, அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை உடனடியாக ஜனாதிபதிக்கும் மீன்பிடி  அமைச்சிக்கும் அதுபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மீன் கொள்ளை தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம் பெறப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டதோடு, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் நெறிப்படுத்தலின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படையினர், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


எமது மீனவர்களின் மற்றுமொரு பிரச்சினையான கடல் அரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததோடு, கல்முனை  பிரதேசத்தில் உள்ள கடலரிப்புக்குள்ளான பிரதேசங்களில் உடனடியாக கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கற் தடைகளை ஏற்படுத்துவதற்கு அவ்வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் துளசிதாசன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, மீனவர்களும் கலந்து கொண்டு கௌரவப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.



No comments