Column Left

Vettri

Breaking News

ஐ.ம.சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் பதவி விலகல்!!




தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் விலகவில்லை என்றும். ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தனது அரசியல் பயணம் தொடரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் 04 உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளனர்.

இதனையடுத்து உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்குரிய உறுப்பினர் தெரிவை மையப்படுத்தியே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி சபை ஆசன பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையே தான் பதவி விலக காரணம் என அசோக சேபால தெரிவித்துள்ளார்.

No comments