Column Left

Vettri

Breaking News

சாகாமம் வால்கட்டுப்பிள்ளையார் ஆலய பிரதிஸ்டா கும்பாபிஷேகம்




 வி.சுகிர்தகுமார்              

சுக்கில பட்ச சதுர்த்தி தினமான இன்று (30) அக்கரைப்பற்று சாகாமம் வால்கட்டுப்பிள்ளையார் ஆலய பிரதிஸ்டா கும்பாபிசேகம நடைபெற்றது.
வயலும் வயல் சூழ்ந்த நிலமும் அருகிலே குளமும் இயற்கை வளம் நிறைந்த பிரதேசமான குளக்கரை அருகே வேப்பை மரத்தின் கீழ் அமர்ந்திருந்த பிள்ளையாருக்கு நிரந்த ஆலய அமைத்து இன்று பிரதிஸ்டா கும்பாபிசேகமும் செய்து வைக்கப்பட்டது.
யாக பூஜைகள் இடம்பெற்றதுடன் கலசம் வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றதன் பின்னர் பிள்ளையாருக்கும் ஆதி மூலவருக்கும் அடியவர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

இதன் பின்னராக  கும்பம் வெளிவீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்டு கலசம் மீது சொரியப்பட்டதுடன்  பிரதான கும்பம் பிள்ளையாருக்கும் ஆதி மூலவர் மீதும் சொரியப்பட்டது. தொடர்ந்து விசேட அலங்கார பூஜைகள் இடம்பெற்றதுடன் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் வால்கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் புனருத்தானத்தை பொறுப்பேற்று செயற்படுத்தியவருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற பிரதிஸ்டா கும்பாபிசேக கிரியைகளை  வித்யாசாகரர் சிவாச்சாரிய கலாபவனமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்ணகுமார சிவாச்சாரியார்; தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.  




No comments