சுற்றுலாத்துறையை சீர்குலைக்க அரசுக்கு எதிராக பாரிய சதி முயற்சிகள்!!
போலி காணொளிகள் மூலம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் கூறியதாவது: வளர்ச்சியடைந்து வரும் நாட்டின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலிச் செய்திகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வெலிகம மற்றும் அறுகம்பை பகுதிகளை தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட போலி பிரசார நடவடிக்கைகள் மூலம் இவை தெளிவாகிறது.
இதன்முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொலி காட்சியாகும்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட காணொலி 2024 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்பது கண்டறியப்பட்டது. இரண்டாவது, அறுகம்பே பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பிகினி Bikini ஆடை அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது அப்பகுதியில் இனப் பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என்பது உறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம்பே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments