திருக்கோவில் கல்வி வலயத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி !!
ஜே.கே.யதுர்ஷன்
அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக இடம்பெற்றது....
குறிந்த போட்டியானது திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா .உதயகுமார் தலைமையில்2025/05/28 இன்று காலை 08.00க்கு தமிழ் மொழித்தின பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் பின்னர் தேசிய மற்றும் வலயக்கொடிகள் ஏற்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது மங்கள விளக்கேற்றல் மற்றும் மாணவர்களின் வரவேற்பு நடனமும் தமிழ் தாய்வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்து தமிழ் மொழி தின வாழ்த்து என்பன இடம்பெற்றது....
இப் போட்டி நிகழ்வில் திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றதுடன் 2024 ஆண்டில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது....
No comments