Column Left

Vettri

Breaking News

ஒரு வருடமாவது பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் - மக்கள் கோரிக்கை!!




 பாறுக் ஷிஹான்

நடைபெற்று முடிந்த 2025ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டம்  காரைதீவு பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ள சுயேட்சைக்குழு ஆசனத்தை ஒரு வருடமேனும் மாவடிப்பள்ளிக்கும் வழங்க வேண்டும் என மாவடிப்பள்ளி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த 2025ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டம்  காரைதீவு பிரதேச சபைக்கு தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு போதியளவு வாக்குப்பெறாமையினால் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தை இழந்திருந்தது. அதில் பிரதான வேட்பாளர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் பட்டியல் உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், மாளிகைக்காடு மாவடிப்பள்ளி பிரதேச மொத்த வாக்கு அடிப்படையில் குறித்த பட்டியல் (போனஸ்) ஆசனமொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் மாவடிப்பள்ளி வாக்குகளைப்பெற்று எந்த விதமான பட்டியல்  ஆசனங்களையும் எவருக்கும் கொடுக்கவில்லை என்ற ஐயப்பாடு மக்களிடத்தில் வெகுவாகப்பரவியது. இருந்தும் இம்முறையும் மாவடிப்பள்ளி வாக்காளர்களினை கறிவேப்பிலையாக பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அடிப்படையில், இந்த ஆசனம் ஒரு வருடமனும் மாவடிப்பள்ளிக்கும் வழங்கப்பட வேண்டும். அது மாவடிப்பள்ளி சுயேட்சைக்குழு வேட்பாளர்  எம்.ஆர்.எம்.மர்ஷாத் அவர்களுக்கு பிரதேச சபை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மாளிகைக்காடு கிராமத்திற்கு ஏலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை என்று மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மாவடிப்பள்ளிக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைக்கப்பெற்றது.

எனவே, மாவடிப்பள்ளிக்கே அந்த ஆசனத்தில் ஒரு வருடமாவது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் அவர்களினால் வழங்கப்பட வேன்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் 479 வாக்குகளை பெற்று சுயேட்சை அணித்தலைவர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர்  பட்டியல் (போனஸ்)  ஆசனத்தைப் பெற்றுள்ளார் .

ஆகவே சுயேட்சை குழு தலைவர் இதனை உணர்ந்து இந்த ஆசனத்தை மாவடிப்பள்ளிக்கும் தாராள மனம் கொண்டு ஒரு வருடமும் வழங்க வேண்டுமென  அப்பிரதேச வாழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments