Column Left

Vettri

Breaking News

மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன் : ஏ. ஆதம்பாபா எம்.பி.




 நூருல் ஹுதா உமர் 


மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு. தமது பிரச்சினைகள் சில தினங்களில் தீராது போனால் மீனவர்கள் வீதிக்கு இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கான சூழ்நிலை உருவாகாது ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாபா தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் இன்று நடத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பாக ஒன்று கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 

கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் ஒலுவில் துறைமுகம் பற்றியோ, மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியோ எங்கும் பேசவில்லை. மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். நாங்கள் ஜே.வி.பியை இங்கு அறிமுகம் செய்தபோது யாரும் எங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் மீனவர்கள் இம்முறை என்னுடன் சேர்ந்து வெற்றிக்காக உழைத்தார்கள். ஆனபோதிலும் நான் தோல்வி அடைந்தேன். கொள்கைகளை மாற்றி ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். 

பலருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமான இந்த தொழில் இப்போது கஷ்டத்தை உடைய நிலைக்கு சென்றுள்ளது. அந்த நிலையை நானும் அறிவேன். மீனவர்கள் போராட்டம் செய்து 10-15 நாட்களுக்குள் தீர்வு அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அது சாத்தியமில்லை. அரசாங்கம் அமைக்கப்பெற்று 06 மாதங்களே கடந்துள்ளது. ஜனாதிபதி, உரிய அமைச்சர்கள், உரிய அதிகாரிகளை கொண்டு விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன் என்றார்.

No comments