Column Left

Vettri

Breaking News

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பெயரில் எஞ்சி இருந்த ஒரே ஒரு அசையா சொத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கைமாறியது!




 நூருல் ஹுதா உமர் 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த  ஒரே ஒரு அசையா சொத்தும்; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 2025.05.19 ஆம் திகதி பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரபால், பதில் உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக அவரது அரசியல் எதிரிகளால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் அஷ்ரப், தனது குடும்பத்துக்காக தனது பெயரில் வைத்திருந்த, ஒலுவில் சந்தி பிரதான வீதியை அண்மித்த பிரதேசத்தில் உள்ள, தான் குடியிருப்பதற்காக கட்டிய  ஒரேயொரு அசையா சொத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டதனூடாக அவரது அரசியல் எதிரிகளால முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்களில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முதன்மையானவராகிறார். 1995 இல் தென்கிழக்குப் பல்கலைகழகத்தை ஸ்தாபிதத்தினூடாக பிராந்தியத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இது உருவாக்கப்பட்டுள்ளதால் முழு இலங்கை மக்களினதும் கல்வி முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார் அவருடைய அயராத முயச்சி மற்றும் அவருக்கிருந்த அரசியல் பலம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரைப் பயன்படுத்தி இலங்கைக்கான தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற ஒலுவில் பிரதேசத்திலே ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் இரண்டு பீடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று ஆறு பீடங்களுடன் உள்வாரியாக மாத்திரம் 8000 அளவிலான மாணவர்களையும் அதற்குச் சமாந்திரமான அளவில் வெளிவாரி மாணவர்களையும் கொண்டு இயங்கி வருகின்றது.
அஷ்ரப் அவர்களினால்; அவர்களது அரசியல் பலத்தினால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தபோதிலும் கூட ஒலுவில் பிரதான வீதிக்கு அண்மித்ததாக தனது இறுதிக் காலத்தில் வாசிப்பதற்க்காக அவரால் அமைக்கப்பட்ட வீடு ஒன்று இருந்து வந்தது. அந்த வீட்டையும் அந்த சுற்றியுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த நிலத்தினையும் அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரப் அவர்களால் அவரது தாயார் பேரியல் அஷ்ரப் அவர்களது முழு வழிகாட்டலின் கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சட்டபூர்வமான ஆவணங்களுடன் நன்கொடையாக கையளிக்கப்பட்டது.

குறித்த காணியை பெற்றுக்கொள்வதில் ஆரம்பக்கட்டத்தில் அயராது உழைத்த முன்னாள் உபவேந்தர் அபூபக்கர் றமீஸ் அவர்களும் அவரோடு இணைந்திருந்த சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் விஷேடமாக குறித்த நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் அவர்களினால் அழைக்கப்பட்டிருந்தார்கள.
கவனிப்பாரற்றுக்கிடந்த குறித்த வீட்டையும் அதனைச் சூழவுள்ள காணியையும் கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு பல்கலைக்கழகத்துக்கு பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார் உள்ளிட்ட குழுவினர் எடுத்துக்கொண்ட மீள் முயச்சிகள் காரணமாகவும் குறித்த காணி கைமாறல் ஏற்பட்டிருன்தது.

இந்த நிகழ்வுகளிலே பல்கலைக்கழகத்தின் சார்பில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி  பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாறுன்,  பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுடீன், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச். நபார், மற்றும் சட்டம் மற்றும் ஆவணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  உதவிப்பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது மகன் அமான் அஷ்ரபுடன் வருகை தந்திருந்த குழுவினரும் பங்குகொண்டிருந்தனர்.
இங்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், அமான் அஷ்ரப், முன்னாள் உபவேந்தர் அபூபக்கர் றமீஸ், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், அஷ் செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் மற்றும் கலாநிதி எம்.எச். ஹாறுன் ஆகியோரால் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் மறைத்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடைய கனவு இல்லம்; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. இது வரலாற்றில் முக்கியமான ஒரு விடயமாகும். இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய  அஷ்ரப் அவர்களது புதல்வர் அமான் அஷ்ரப் அவர்களுக்கும் அஷ்ரப் அவர்களது துணைவியார் பேரியல் அஷ்ரப் அவர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் சார்பில் பதில் உபவேந்தர் நன்றி தெரிவித்தார்.







No comments