Column Left

Vettri

Breaking News

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.காவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்பது அதாவுல்லாவை படு குழியில் வீழ்த்தும் : ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஏ.சி. யஹியாகான் எச்சரிக்கை




 நூருல் ஹுதா உமர் 


அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற பிரதேச சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க தேசிய காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை அரசியல் தற்கொலை செய்யும் விதமாக அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய காங்கிரசின் மக்கள் செல்வாக்கை நிரூபித்து, மக்கள் எப்போதும் தம்முடனையே இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும் மக்களின் தீர்ப்பை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏற்க வேண்டும்.  மு.காவை அந்த மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.  அட்டாளைச்சேனை பிரதேச சபை விடயத்தில் அதாவுல்லா தவறான முடிவுகளை  எடுக்கக் கூடாது.

மக்களின் நம்பிக்கையை ஏ.எல்.எம்.அதாவுல்லா பாதுகாக்க வேண்டும். அட்டாளைச்சேனையில் மு.காவுடன் கூட்டுச் சேர்வது ஆரோக்கியமற்றது. மட்டுமன்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.காவுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்பது ஏ.எல்.எம். அதாவுல்லாவை படு குழியில் வீழ்த்தும் என்றும்  ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று மக்களின் தீர்மானத்தை அதாவுல்லா புறந்தள்ளக் கூடாது. முஸ்லிம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்பி அதாவுல்லா செயற்படுவாராக இருந்தால் இனி வரும் தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் மண் கவ்வும் என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறேன். மக்களின் தீர்மானத்தை மதித்து முகாவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க முயலும் முடிவை அதாவுல்லா மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.

No comments