இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments