கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்பு!!
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த 4 இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடி கொண்டிருந்தவேளை கடல் நீரினால் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், 17 வயதான உதயகுமார் ஸ்ரீதரன், 19 வயதான ஸ்ரீகாந்த் சரன்ராஜ், 18 வயதான ஸ்ரீகாந்த் அஜித்குமார் மற்றும் 27 வயதான யூசுப் வென்னப்புவ போலஸ்வத்த ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments