Column Left

Vettri

Breaking News

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் தொடர்பில் விசாரணை!!




பாறுக் ஷிஹான்

 
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில்  சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இச்சம்பவம்   ஞாயிற்றுக்கிழமை(5)மாலை அம்பாறை மாவட்டம்  இறக்காமம் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது சந்தேகத்திற்கிடமாக  ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய 22 வயது இளைஞன்   சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப்படையினரால்   கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மற்றும் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையின் பலனாய்வு பிரிவிற்கு  கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  வாங்காமம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக  இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

No comments