Column Left

Vettri

Breaking News

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!!




 





பாறுக் ஷிஹான்
 
பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட  பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான  கூட்டம்   மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

பெரியநீலாவணை பொலிஸ் சமூக பாதுகாப்பு குழுவின் தலைவர் இசட்.சாஜித் முனீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி. எச். டி. எம். எல். புத்திக மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க  சிவில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களின் பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தற்போது  கிராமங்களில் இடம்பெறும்   திருட்டுச் சம்பவங்கள்  போதைபொருள் பாவனை,விற்பனை, மற்றும் சமூக சீர்கேடு தொடர்பான விடயங்கள், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள்  தொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்துதல் தொடர்பாக  பொலிஸாரினால்  அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுடன் இணைந்ததாக பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us