Vettri

Breaking News

மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த கைதி!!




 மூளைக் காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு  காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரணம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments