Column Left

Vettri

Breaking News

சுற்றுலா பயணிகள் வருகை 100 வீதத்தால் அதிகரிப்பு!!





 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதில் 100 வீத அதிகரிப்பு காணப்படுவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 1,02,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த வருடத்தில் அந்த எண்ணிக்கை 2,08,253 பேராக அதிகரித்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் இதை ஒப்பிடுகையில் நூற்றுக்கு 103.1வீத அதிகரிப்பு காணப்படுகிறது.

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவிலானோர் இந்தியாவிலிருந்தே பதிவாகியுள்ளனர்.இந்த வகையில் இந்தியாவிலிருந்து 34 ஆயிரத்து 399 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் பிரிட்டனிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments