Vettri

Breaking News

அட்டை பண்ணை ஒன்றில் 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!!




 மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹாரத்தின்  ஆலோசனையின் பெயரில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர்  செளத்பார் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 31 ஆயிரம்  போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவர்  திங்கட்கிழமை மாலை  கைது செய்யப்பட்டிருந்தார்.

 குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலைய பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments