Vettri

Breaking News

பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!









 பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து ரொட்டியின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments