Column Left

Vettri

Breaking News

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது!!!




 இவ் வருடம் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 80,222  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அதிகளவாக  16,948 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மாகாண ரீதியில் அதிகளவாக 37,216 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்  பதிவாகியுள்ளனர். அங்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,734 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.


டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்றவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments