Vettri

Breaking News

கல்கிசையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது





 கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (27) இரவு ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராவார்.

கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது 30 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments