Vettri

Breaking News

அடுத்த ஆண்டு முதல் பெட்ரோல்-டீசலுக்கு 10% வரி!





 அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை 10% அதிகரிக்கலாம் என்று சமீபத்தில் நடைபெற்ற அரசு நிதித்துறைக்கான பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அரசாங்க வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதன் காரணமாக அடுத்த வருடம் (2024) முதல் VAT வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

எவ்வாறாயினும், மண்ணெண்ணெய்க்கு இந்த வரி அறவிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் “கோப்” குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணையை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

No comments