Vettri

Breaking News

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண்




 இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது  காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பயங்கரவாத தடைச் சட்டம்

காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிரத் தொடங்கியதன் பின்னரே, அதிகாரிகள் தமது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இந்தநிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்துதல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துபூர்வ உறுதிமொழி

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தலைமறைவாக இருக்கும் பிரித்தானியப் பெண் | British Woman Trapped In Sri Lanka For 13 Months

இதன்போது அவர், கெய்லீ ஃப்ரேசர் இலங்கையை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற எழுத்துபூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments