Column Left

Vettri

Breaking News

சவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட இரும்பு ஆணிகள்..




 வுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்குப் பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சவுதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டில் தூதரகத்தின் ஊடாக குறித்த பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மாத்தளை, அல்கடுவ பிரதேசத்தினை சேர்ந்த எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இருபத்தொரு வயதான ஒரு பிள்ளையின் தாயான எம்.எஸ். தியாக செல்வி என்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவரது தாய் வத்தேகம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.






No comments

Subscribe Us