Vettri

Breaking News

போராட்ட களத்திற்காக தயார் செய்யப்பட்டு வரும் இளம் பிக்குகள்: பின்னணியில் அரசியல்வாதிகள்..




 நாட்டில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்களை போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னணியில் அரசியல்வாதிகள்

போராட்ட களத்திற்காக தயார் செய்யப்பட்டு வரும் இளம் பிக்குகள்: பின்னணியில் அரசியல்வாதிகள் | Sri Lanka Political Crisis Young Mongs Protest

இதன் பின்னணியில் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் இருப்பதாகவும் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments