Vettri

Breaking News

நில்வளா கங்கை பெருக்கெடுப்பு ; மாத்தறையில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின !




 




மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், அப்பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் பரடுவ பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்குரஸ்ஸ - ஹொரகொட ஊடான மாத்தறை வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்குரஸ்ஸ - சியம்பலாகொட வீதியின் பாணடுகம பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது.

அக்குரஸ்ஸ - கம்புறுப்பிட்டிய வீதி மற்றும் அக்குரஸ்ஸ - மாகந்துர வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments