Vettri

Breaking News

விடுதலை செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள்




 யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் நேற்று (27) விடுதலை செய்யப்பட்டனர்.

இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில்  ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

18மாத சாதாரண சிறைத்தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் நேற்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் | 17 Tamil Nadu Fishermen Released

இதன்போது மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18மாத சாதாரண சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், நிபந்தனையுடன் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் உரிமை கோரிக்கை வழக்கின் பின்னர் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்தார்.

No comments