Column Left

Vettri

Breaking News

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி!!




பாறுக் ஷிஹான்

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால்   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஞாயிற்றுக்கிழமை (2 )   பெரியநீலாவனை, கல்முனை, மாளிகைக்காடு,ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று  பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்இ அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் பிரதேச செயற்ப்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments