Column Left

Vettri

Breaking News

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது!!




 அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக பெண் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலக அதிகாரி, அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக, சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் (13) பொலிஸ் நிதி குற்றப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.

அதன்படி, இந்த அதிகாரி 35 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


No comments