வேலோடுமலையில் இருந்து கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல்யாத்திரை ஆரம்பம்
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடுமலை முருகனாலயத்தில் இருந்து ஆலய தலைவர் முருக பக்தர் முருகஸ்ரீ சு.தியாகராஜா தலைமையில் கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல் பாதயாத்திரை வியாழக்கிழமை (13) ஆரம்பமாகியது.
வியாழக்கிழமை காலை முருக பெருமானின் வேல்சாமிகளாக வேலோடுமலை முருகஸ்ரீ தியாகராஜ சுவாமிகளிடம் சிவயோகி நமசிவாய சுவாமிகள் முன்னிலையில் காரைதீவு வேல்சாமிகளினால் சிறப்பு வேல் பூஜை நடைபெற்று வேல் வாங்கும் படலம் வேலோடு மலையில் சிறப்பாக நடைபெற்றது.
வேலோடுமலையில் இருந்து கதிர்காம கந்தனின் வேலோடு அரோஹரா கோசம் முழங்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.
அன்றிரவு இரவு மயிலம்பாவளியில் தங்கினார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை
காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை தரிசித்த அவர்கள் குருக்கள் மடத்தில் தங்கினர்.
நேற்றுமுன்தினம் 14/06/2025 சனிக்கிழமை;
காலை களுதாவளை.
இரவு - பாண்டிருப்பில் தங்கினார்கள்.
நேற்று 15/06/2025 ஞாயிற்றுக்கிழமை;
காலை - காரைதீவு.
மற்றும் அக்கரைப்பற்றில் தங்கினார்கள்.
No comments