Column Left

Vettri

Breaking News

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு




 புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அனைத்து கலால் அனுமதி பெற்ற மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று (03) நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட உரிமங்களுடன் ஹோட்டல்கள் மற்றும் சிறப்பு வில்லாக்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மது வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


No comments

Subscribe Us