Column Left

Vettri

Breaking News

விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல்




 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும்,  நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்  என்று கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.


மேலும் பல மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3A, ரி.கஜினி  A2B ஜே.ஹேசுதன் 2AB பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .

பொறியியல் துறைக்கு என். தனுசாந்த் 3A, வி.விருட்சிகன் 3A,  ரி.யுகேஷன் ABC, ஆர்.மோனிஷன் 2 BCசித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.

கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3Aசித்திகளையும் பெற்றுள்ளார்கள்.

No comments

Subscribe Us