Column Left

Vettri

Breaking News

நாளை கல்முனையில் "மதியூகி மத்தியூ அடிகளார்" தொடர் நினைவுப் பேருரை!!




( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் கல்விமான் மதியூகி அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ நினைவுப் பேருரை நாளை  (2-ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணிக்கு கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் வண. அருட்சகோதரர் எஸ்ஈ. ஹெஜினோல்ட் (FSC)  கலந்துகொள்கிறார்.

நிகழ்விற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி ஜே. அதிசயராஜ் தலைமை வகிக்க, நினைவு நாயகரை பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன்  அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையை “சர்வதேச தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் இலங்கையின் கல்விச் செயன்முறை நகர்கிறதா?” எனும் தலைப்பில்  அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி சட்டத்தரணி கி. புண்ணியமூர்த்தி  வழங்குகிறார்.

பேருரையாளர் அறிமுகத்தை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச. நவநீதன்  நன்றி உரையை வழங்க  கலாசார உத்தியோகத்தர் த. பிரபாகரன்  வழங்குவார்.

No comments