Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 


அதேநேரம், எதிர்வரும் நாட்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
 
அத்துடன், வடக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது

No comments